மரக்கறி விதைகள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளத்தினூடாக வீட்டுத் தோட்டப் போட்டியினை ஊக்குவிக்கும் முகமாக கழக அங்கத்தவர்களுக்கு மரக்கறி விதைகளும், தென்னங்கன்றுகளும் வழங்கப்படும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவி ஜெ.தனுஷியா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி த.இரதீசன், ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஆலோசகர்கள் லக்சிதரன், தவசீலன் மற்றும் சம்மேளன உறுப்பினர்கள், இளைஞர் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த தென்னங்கன்றுகள் மற்றும் வீட்டுத் தோட்ட விதைப்பைகளை சம்மேளனத்தின் ஆலோசகர்களான சத்தியசுதர்சன், லக்சிதரன் ஆகியோர் ஒழுங்கு செய்து வழங்கியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.