கேரளா கஞ்சாவுடன் கைது பொது மக்களால் மடக்கிப்பிடிப்பு.

போதைப்பொருள் கொள்வனவிற்காக பிறைந்துரைச்சேனை 2ம் குறுக்கு தெருவுக்கு வருகை தந்த வாழைச்சேனை, விநாயகபுரத்தைச்சேர்ந்த நபரொருவர் கேரளா கஞ்சாவுடன் அப்பிரதேச பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தொடர்பில் வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதுடைய குறித்த நபரிடமிருந்து 2 கிராம் 850 மில்லி கிராம் கேரளா கஞ்சா, 150 ரக பல்சர் மோட்டார் சைக்கிள், கையடக்கத் தொலைபேசி போன்றனவும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அத்தோடு, சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போதையொழிப்பு தொடர்பில் பொது மக்கள் மத்தியில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வே இவ்வாறு குறித்த நபர் கைது செய்யப்பட காரணமாக அமைந்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.