ரிசாட் வீட்டில் மலையக சிறுமி கொலை செய்யப்பட்டது கண்டிக்கப்படதக்கது.

இந்த சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டும் இதே போன்று எதிர்காலத்தில் நடைபெற கூடாது என்பதற்காகவும் பல பொதுஅமைப்புக்கள் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் உறுதியாக போராடிக்கொண்டிருக்கின்ற சூழலில் எதிர்வரும் காலத்தில் தேர்தலில் வாக்கு பெறவும் மக்களை ஏமாற்றும் இணக்கப்பாடான அரசியலை மேற்கொள்ளவும் சிலர் இஸ்லாமிய சமூகத்திற்கு சார்பாக நடைபெறுவது என கருத்து தெரிவிப்பதும் கண்டிக்கதக்கது.

ஒருவரும் இன்னொரு மதம் சார்பான கருத்துக்களை தெரிவிக்கவில்லை.
வறுமையை சார்பாகவைத்து இந்த சிறுமியை கொன்றமை தொடர்பில் நாட்டின் நீதி துறையும் சட்டதுறையும் சிறப்பான விசாரணையை மேற்கொண்டு அந்த சிறுமியின் கொலைக்கு காரணத்தையும் அந்த சிறுமிக்கேட்பட்ட கொடுமைகளையும் மேற்கொண்டோரை சட்டத்தின் முன் நிறுத்துவதில் நாம் தெளிவாக உள்ளோம். இதில் யாரும் அரசியல் மேற்கொள்ளவில்லை.

எமது மகளீர் அணி மலையக சிறுமிக்காக முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் மகளீ;ருக்கு இதுபோன்ற கொடுமைகள் இனிமேல் நடக்க கூடாது என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் இன்று அவரது அலுவலுகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.