அதிபர், ஆசிரியர்களின் மாபெரும் எதிர்ப்பு வாகன பேரணி கொழும்பை நோக்கி இன்று

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி, கொழும்பை நோக்கி வாகன பேரணியொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

நீர்கொழும்பு வீதியின் நவலோக்க விளையாட்டு மைதானம், கண்டி வீதியின் கடவத்தை அதிவேக வீதி நுழைவாயில், ஹய்லேவல் வீதியின் பன்னிபிட்டி தர்மபால பாடசாலை மற்றும் காலி வீதியின் மொறட்டுவை நகரம் ஆகிய பகுதிகளிலிருந்து இந்த வாகன பேரணி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகன பேரணி முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, நண்பகல் 12 மணிக்கு கொழும்பு ஜனாதிபதி செயலகம் நோக்கி வருகைத் தரவுள்ளதாக அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.