வயோதிபர் இல்லத்தில் 26 பேருக்குக் கொரோனா!

பிலியந்தலையிலுள்ள வயோதிபர் இல்லத்தில் வயோதிபர்கள் உள்ளடங்களாக 26 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனப் பிலியந்தலை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க எல்லாவல தெரிவித்துள்ளார்.

குறித்த இல்லத்தில் 20 வயோதிபர்களுக்கும், நிர்வாகக் குழுவைச் சேர்ந்த 6 பேருக்குமே கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் நிலவும் இட நெருக்கடியைக் கருத்தில்கொண்டு தொற்றாளர்கள் அனைவரும் வயோதிபர் இல்லத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குத் தேவையான வைத்திய வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.