ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் கைது!

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 28 ஆண்களும் 16 பெண்களும் அடங்குகின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் வாகனப் பேரணி மூலம் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, ஜனாதிபதி செயலகத்துக்கான வீதியைக் குறுக்கிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் 10 வாகனங்களையும் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.