கொவிட் நோயாளிகள் அதிகரித்தாலும்,நாடு மூடப்படாது : ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (6) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கொவிட் ஒடுக்குதலுக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில், கொவிட் விரிவாக்கத்தின் காரணமாக நாடு மூடப்படாது என்று கூறியுள்ளார்.

கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், நாட்டை மூடுவதற்கான சாத்தியம் இல்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நிலைமை குறித்து அதிக கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதாரத்துறைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.