ஆசிரியர் – அதிபர் சங்கங்களின் ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப்பட்டது

ஆசிரியர் – அதிபர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் பரவல் நிலை காரணமாக பஸ்யால பகுதியில் வைத்து இந்த பேரணி கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நிலையிலேயே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டபேரணி திங்கள்கிழமை கொழும்புக்கு வந்து சேரும் என்றும் , அங்கு மாபெரும் போராட்டம் ஒன்றைமுன்னெடுக்கத் திட்டமிடப்பட்டது.

ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் தொழிற்சங்கங்களால் , 23 வருட சம்பள முரண்பாட்டை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஊர்வலம் தொடங்கியது.

Leave A Reply

Your email address will not be published.