ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்டோர் தாக்கல் செய்த பிணை மனு தொடர்பில் நீதிமன்றம் எடுத்த முடிவு?

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த ஹிஷாலினி, மர்மமான முறையில் தீ காயங்களுடன்  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  உயிரிழந்திருந்தார்.

இச் சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் இடைதரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரினால் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நான்கு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் இன்று  (09) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.