ஆசிரிய – அதிபர்களின் சம்பள பிரச்சினைகள் குறித்து ஆராய உப குழு நியமனம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை உப குழுவொன்று  அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, மஹிந்த அமரவீர மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை துணைக்குழு நியமிக்கப்பட்டது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைகளை ஆய்வு செய்யவும், அமைச்சரவையில் விரைவாக அறிக்கையை சமர்ப்பிக்கவும் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.