தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாதாந்திர சிகிச்சைக்காக சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவே வீடு திரும்பினார்.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று மாலை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில், வழக்கமான மாதாந்திர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும், விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்.

Leave A Reply

Your email address will not be published.