வீடியோவில் கதறி கெஞ்சிய இளம்பெண்கள்! தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், மணிவண்ணன், சதீஸ் ஆகிய 5 பேர் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

அந்த வீடியோக்களில் பல பெண்கள் கெஞ்சி கதறி அழும் காட்சிகள் இருந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ என்று வழக்கு விசாரணை விரிவடைந்து கொண்டே சென்றது.

இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அ.தி.மு.க பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹேரன் பால், பாபு ஆகிய 3 பேர் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை இந்த வழக்கில் 5 பேர் மட்டுமே புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், திடீரென கடந்த இரண்டு மாதங்களில் மேலும் 3 பெண்கள் பேர் புகார் கொடுத்துள்ளனர். இதனால், புகார் கொடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

இந்த வழக்கு, கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில், பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமும் இந்த வழக்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும், சிபிஐ விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்பி முத்தரசியை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.