இங்கிலாந்து அணியில் மொயீன் அலி சேர்ப்பு.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காம் டிரென்ட்பிரிட்ஜியில் கடந்த 4-ந்தேதி முதல் 8-ந்தேதி (நேற்றுமுன்தினம்) வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெறும் நிலையில் இருந்தது. கடைசி நாள் ஆட்டம் முழுவதும் மழையால் நடைபெறாமல் போனதால், போட்டி டிராவில் முடிந்தது.

2-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் விளையாடியது. லார்ட்ஸ் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மொயீன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவர் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் அஷ்வின் சேர்க்கப்படவில்லை. ஜடேஜா இடம் பிடித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.