மட்டு வவுணதீவில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் முள்ளம் பன்றி இறைச்சியுடன் ஒருவர் கைது.

மட்டக்களப்பில் வவுணதீவு பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கி மற்றும் 6 கிலோ இறைச்சியுடன் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (10) நள்ளிரவில் கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசந்த அப்புகாமி தெரிவித்தார்.

விசேட புலனாய்வுபிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வவுணதீவு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜ.என்.விக்கிரமசிங்க தலைமையிலான பொலிசார் சம்பவதினமான நேற்று நள்ளிரவு காந்திநகர் பகுதியில் சோதனை நடவடிக்கையை

மேற்கொண்டவேளை கொண்ட நிலையில் முள்ளம் பன்றியை
துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி அதன் இறைச்சியை உரைப்பையில் எடுத்துக் கொண்டு துப்பாக்கியுடன் திரும்பும் போது அந்த நபரை பொலிஸார் கைதுசெய்ததுடன் 6 கிலோ முள்ளம்பண்டி இறைச்சி மற்றும் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டனர்.

கைது செய்யப்பட்டவர் காந்திகிராமத்தைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.