பைஸர் தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு!

மன்னார் மாவட்டத்தில் பைஸர் தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பைஸர் தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசி பேசாலை சென்.மேரிஸ் கல்லூரி, வங்காலை புனித ஆனாள் தேவாலயம், அச்சங்குளம் தேவாலயம், முசலி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, மடு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும் வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் நகரத்தில் சித்திவிநாயகர் இந்து கல்லூரி, மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி, நானாட்டான் டிலாசால் பாடசாலை, மடு தட்சணா மருதமடு பாடசாலை, மறிச்சுக்கட்டி அல்.யசிர் பாடசாலையிலும் இரண்டாம் கட்ட பைஸர் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

சுகாதார துறையினருடன், இராணுவம் மற்றும் விமானப் படையினர் இணைந்து குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.