ஒரே நாளில் 156 பேர் உயிரிழப்பு ; 4 நாட்களில் 509 பேரைக் காவுகொண்டது கொரோனா

இலங்கையில் நாளாந்த கொரோனா மரணங்கள் உச்சமடைந்து செல்கின்றன. நேற்று 156 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவே நாளொன்றில் அதிகப்படியான கொரோனா மரண எண்ணிக்கையாகும்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்து.

இதன்படி நாட்டில் கடந்த நான்கு நாட்களில் (ஓகஸ்ட் 08,09,10,11) மாத்திரம் 509 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 620 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்த 156 பேரில் 87 ஆண்களும், 69 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதில் 13 பெண்கள், 22 ஆண்கள் என 35 பேர் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 121 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில், 56 பெண்களும், 65 ஆண்களும் அடங்குகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.