யாழில் மேலும் 86 பேருக்குக் கொரோனா!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 86 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் 29 பேருக்கும், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேருக்கும், மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 12 பேருக்கும், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 08 பேருக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 06 பேருக்கும், இளவாலை பிரதேச வைத்தியசாலையில் 05 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் 04 பேருக்கும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேருக்கும், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இருவருக்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.