தேவையற்று வெளியில் வராதீர்கள்! – மக்களிடம் இராணுவத் தளபதி கோரிக்கை.

“இலங்கையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றானது தீவிரமடைந்து வருகின்றது. பொதுமக்கள் எதிர்வரும் நாட்களில் முடிந்தவரை வீட்டுக்குள் இருக்க வேண்டும்.”

இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொது மக்கள் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டும்.தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்.

பணியிடங்களிலுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, அத்தியாவசிய ஊழியர்களை மட்டுமே வரவழைக்க வேண்டும் என்று பொது நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.