படிப்புக்கு வயது தடையில்லை என்பதை நிருபித்த ஹரியானா முன்னாள் முதலமைச்சர்

ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா தனது 86 ஆவது வயதில், 10ஆம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதினார்.

ஹரியானாவில் கடந்த 1999 முதல் 2005ஆம் ஆணடு வரை, இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா முதலமைச்சராக இருந்த போது, ஆசிரியர்கள் தேர்வாணையத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கில், சவுதாலாவுக்கு டெல்லி நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுதாலா, கடந்த 2017ஆம் ஆணடு தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினார்.

இந்தி தேர்வில், ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்களில் ஓம் பிரகாஷ் சவுதாலா முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் தண்டனை முடிந்து, சிறையிலிருந்து வெளியே வந்தார். ஹரியானா திறந்த நிலை கல்வி வாரியம் வாயிலாக அவர், 12ஆம் வகுப்பு தேர்வையும் எழுதினார்.

ஓம் பிரகாஷ் சவுதாலா 10ஆம் வகுப்பு ஆங்கில தேர்வில் தேர்ச்சி பெறாததால், அவருடைய, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அவர், சிர்சா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில், 10ஆம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதினார்.

கையில் எலும்பு உடைந்துள்ளதால், கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்களை கூறி, மற்றொருவர் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.