வெள்ளத்தில் சிக்கி குழந்தைகள் உள்பட 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையை தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி பல குழந்தைகள் உள்பட 20 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 7 மாத இரட்டை குழந்தைகளும் அடங்கும். இதுதவிர, 50 பேர் காணாமல் போயுள்ளனர்.

வெள்ளநீரானது, சில இடங்களில் வீடுகளின் மேற்கூரை வரை சூழ்ந்து காணப்படுகிறது. சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது. மின் வினியோகம் தடைப்பட்டு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்து உள்ளனர்.

அமெரிக்க அதிபர் பைடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தனது இரங்கல்களை தெரிவித்து கொண்டார். தேவையான உதவிகள் அனைத்தும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். டென்னசி மாகாணத்தில் 3வது கட்ட அவசரநிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.