ஊடரங்கு காலத்தில் பொலிஸார் அதிரடி; மேலும் 639 பேர் சிக்கினர்.

நாட்டில் ஊடரங்கு உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 639 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 57 ஆயிரத்து 435 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேல் மாகாணத்துக்குள் ரவேசிக்கும் மற்றும் வெளியேறும் 13 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடையில் நேற்று 1,369 வாகனங்களும், 2 ஆயிரத்து 284 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.