கொவிட் – 19 அறக்கட்டளைக்கு யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி ரூபாய்கள் நன்கொடை.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. வாமதேவா தியாகேந்திரன் (தியாகி) அவர்கள் “செய்கடமை” கொவிட் – 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு, 10 மில்லியன் ரூபாய்களை பாதுகாப்பு படைகளின் யாழ் கட்டளைத் தளபதியிடம் நேற்று நன்கொடையாக வழங்கி வைத்தார்.

வா. தியாகேந்திரன் அவர்கள், கடந்த வருடம், நாடு முதலாவது கோவிட் அலையைச் சந்தித்திருந்த நேரத்திலும் – ஒரு கோடி ரூபாய்களை “செய்கடமை” கொவிட் – 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு வழங்கியிருந்தார் என்பதும் நினைவுபடுத்தப்பட வேண்டியது.

நேற்று அவர் வழங்கிய, தொகைக்கான காசோலை, பாதுகாப்புப் பணிக் குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து என்னிடம் கையளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.