வவுனியா மாவட்ட புதிய அரசஅதிபர் பதவியேற்ப்பு.

வவுனியா மாவட்ட புதிய அரசஅதிபராக பௌத்தசாசன அமைச்சில் உயர் அதிகாரியாக பணியாற்றிய பி.ஏ.சரத்சந்திர இன்று பதவியினை பொறுப்பேற்றார்.

வவுனியா அரச அதிபராக கடமையாற்றிய சமன்பந்துலசேன வடமாகாண பிரதம செயலாளராக பதவி உயர்வு பெற்றுச்சென்றிருந்தார்.

இதனையடுத்து கடந்த ஒரு மாதகாலமாக மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய தி.திரேஸ்குமார் பதில் அரச அதிபராக தனது பொறுப்புக்களை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் பௌத்தசாசன அமைச்சில் முக்கிய பதவியினை வகித்த பி.ஏ.சரத்சந்திர வவுனியா மாவட்டத்திற்கான புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் இன்றையதினம் தனது பதவியினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.