கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 142 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு!

முல்லைத்தீவு சாலை கடற்கரைப்பகுதியில் கடத்தலுக்காக கொண்டுவந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 142 கிலோ கேரள கஞ்சா பொதியினை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பொதிகள் சிறப்பு அதிரடிப்படையினர் மீட்டுள்ளார்கள்.

142 கிலோக்கிராம் கொண்ட கஞ்சா 72 பைகளில் பொதியிடப்பட்டு கடத்தப்படுவதற்காக குறித்த கடற்கரை மணலுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளன.
இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், சிறப்பு அதிரடிப்படையினரால் குறித்த பொதிகள் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான சட்ட நடவடிக்கையினை முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.