பந்துலவுக்கு கொரோனா : நெருங்கி பழகியவர்கள்: ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், இராணுவத் தளபதி, ஐஜிபி ஆகியோர்

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவருடன் நெருக்கமாக பணியாற்றிய அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தனது சமூக ஊடக கணக்கில் ஒரு குறிப்பை எழுதியுள்ளார்.

அவர் நேற்று காலை ஜனாதிபதி தலைமையிலான கொரோனா ஒடுக்கும் பணிக்குழுவில் பங்கு பற்றியிருந்தார்.

ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், சுகாதார அமைச்சர், இராணுவத் தளபதி, DIG மற்றும் பலர் நேற்று நடைபெற்ற கொரோனா ஒடுக்கும் பணி கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.