காபூல் விமான நிலையத்திற்கு அருகில் பாரிய வெடிப்புச் சம்பவம்.

ஆப்கானிஸ்தான் – காபூல் விமான நிலையத்திற்கு அருகில் பாரிய வெடிப்பு சத்தங்கள் கேட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காபூல் விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் கடும் புகை மூட்டமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்பு சத்தங்கள் கேட்பதற்கான காரணம் இதுவரை தெளிவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழப்பு தொடர்பான விபரங்கள் இன்னமும் வெளிவரவில்லை.

காபூல் விமான நிலையத்தில் அடுத்த 24 மணி முதல் 36 ம்ணி நேரத்துக்குள் பயங்கரவாத தாக்குதல் நடைபெறலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ள நிலையில் இவ் பாரிய வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.