யாழ்ப்பாணத்தில் இரத்ததான நிகழ்வு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கொரோனாப் பேரிடர் கால இரத்ததான நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதனின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் யாழ். மாட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதனின் பிரத்தியேக செயலாளர் கே.சிவராம், யாழ். மாநகர சபை உறுப்பினர், கட்சியின் யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் தொகுதி இணைப்பாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொண்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.