இலங்கையில் தடுப்பூசி பெற்ற 103 வயது மூதாட்டி!

இலங்கையில் 103 வயது மூதாட்டி ஒருவருக்கும் கொரோனாத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான தடுப்பூசி ஏற்றும் திட்டம் இலங்கையில் துரித வேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை – முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி நிலையங்களுக்கு வரமுடியாத முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் 103 வயதுடைய மூதாட்டி ஒருவருக்கும் நேற்று வீட்டுக்கே சென்று சுகாதாரத் தரப்பினரால் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

பதுளை பகுதியிலுள்ள குறித்த மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று சுகாதார அதிகாரிகள் தடுப்பூசியைச் செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.