வயோதிபர்களுக்கான விசேட அறிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடமாடும் சேவை மூலமான தடுப்புசி தேவைப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்கள் அந்தந்த பிரதேச செயலகங்கள், கிராம சேவையாளர்கள், சுகாதார பணியாளர்கள், மற்றும் மாவட்ட செயலகம் அல்லது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்த்தில் கடந்த வாரம் முதல் 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பலவீனமானவர்களுக்கு இராணுவ வைத்திய படையினருடன் இணைந்து 57வது, 59வது, 64வது, 66வது மற்றும் 68வது படைப்பிரிவுகளின் படையினர் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தடுப்பூசியினை பெற்றக்கொள்ளாதவர்கள் உடன் தொடர்புகளை மேற்கொண்டு தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.