ஊரடங்கு வேளையில் பாலியல் தொழில்! – தெஹிவளையில் 7 பெண்கள் சிக்கினர்.

பாலியல் தொழில் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைய தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹீல் வீதியில் அமைந்துள்ள வீடொன்றைப் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது அவ்வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 7 பெண்களும், ஆண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்களில் இருவர் 23, 29 வயதான பாணந்துறை மற்றும் வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஏனைய 5 பெண்களும் வெளிநாட்டினத்தவர்கள் எனவும் பொலிஸாரால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.