ஊரடங்குச் சட்ட விதிகளை மீறிய மேலும் 665 பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 665 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்று 69 வாகனங்களும் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.