கொவிட் 19 தொடர்பாடல் நிலையம் பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிவரும் அரச நிர்வாக அமைப்புக்களுடன் இணைந்து செயற்படும் வகையில் பிரதேச இளைஞர் யுவதிகளை இணைத்து உருவாக்கிய கொவிட் 19 தொடர்பாடல் நிலையம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ் ஜெயக்காந் அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தொடர்பாடல் நிலையத்தின் முக்கிய நோக்கம் பிரதேச மக்களுக்கு உதவுவது மட்டுமன்றி, பாதிக்கப்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டிலேயே தங்க வைப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதாகும்.

இதன்படி கொரோனா தொற்றினால் பாதிப்புற்றிருப்பவர்கள் அல்லது அறிகுறிகள் தென்படுபவர்கள் வீட்டிலிருந்து வெளியேறுவதைத் தவிர்த்து அத்தியாவசிய, வைத்திய, பொருளாதார அல்லது வேறுஉதவிகளை பெற்றுக் கொள்ள 077 1116604 / 076 234 1114 ஆகிய தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி தொடர்பு கொள்ள முடியும் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.