நோய் எதிா்ப்பு சக்தி குடிநீா்-சுவதரணீ வழங்கும் திட்டம்.

கிளிநொச்சி மாவட்ட சுதேச மருத்துவ திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நோய் எதிா்ப்பு சக்தி குடிநீா்-சுவதரணீ வழங்கும் திட்டம் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபா் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

மருதநகா் கிராமத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டமானது தலைமை அதிகாரி ,சுதேச வைத்திய திணைக்களம் கிளி/மாவட்டம், வைத்தியா் திரு. சிவநேசன், வைத்திய அத்தியட்சகா், திருமதி டிசாந்தி சசிகுமாரன் சுதேச வைத்திய திணைக்களம் ,பரந்தன்,கிளிமாவட்டம் மற்றும் உத்தியோகத்தா்கள்,மருதநகா் வாழ் மக்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியானது இக்கால கட்டத்தில் முக்கியமானதும் அவசியமானதும் ஆகும் .எனவே பெறுமதியான இந்நிகழ்ச்சி திட்டத்தை தமது கிராமங்களிலும் முன்னெடுக்க விரும்புபவா்கள் வைத்திய அத்தியட்சகா் திருமதி டிசாந்தி சசிகுமாரன் அவா்களை தொடர்பு இலக்கம் 0777667252 ஊடாக தொடர்புகொள்ள முடியும்.

Leave A Reply

Your email address will not be published.