அமெரிக்காவில் டெல்டா பரவல் அதிகரிப்பு : ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய தடை

அமெரிக்காவில் டெல்டா நெருக்கடி வேகமாகப் பரவி வருவதால் அமெரிக்கர்கள் , ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக அமெரிக்கர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் தனது உறுப்பு நாடுகளுக்கு பரிந்துரைத்திருந்தாலும், சில நாடுகள் அமெரிக்கர்கள் தங்கள் நாடுகளுக்குள் நுழைய முற்றிலும் தடை விதித்துள்ளன.

அடுத்த சில மாதங்களில் ஐரோப்பிய நகரங்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்த ஏராளமான அமெரிக்கர்கள், சில வாரங்களுக்கு முன்பு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதிக்கும் முடிவை மாற்றியதால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், அமெரிக்காவில் உள்ள 26 மாநிலங்கள் தங்கள் மக்கள்தொகையில் பாதியினருக்கு முழு கொரோனா தடுப்பூசியை வழங்கியுள்ளன, ஆனால் தடுப்பூசி போடப்படாத கொரொனாவால் பாதிக்கப்பட்ட மக்களால் நிரம்பிய மருத்துவமனைகள் இப்போதும் அங்கு நிரம்பி வழிகின்றன.

Leave A Reply

Your email address will not be published.