வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடிக்க கடலில் இறங்கிய மீனவர் மாயம்!

யாழ்., வடமராட்சி கிழக்கு, குடாரப்பு கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பதற்காகக் கடலில் இறங்கிய மீனவர் ஒருவரைக் காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

சனிக்கிழமை குறித்த மீனவர் படகில் சென்று கடலட்டைப் பிடிப்பதற்காகச் சிலிண்டருடன் கடலினுள் இறங்கியுள்ளார்.

குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் அவருடன் இணைக்கப்பட்டிருந்த கயிற்றை மேலே இழுத்தபோது அவரைக் காணவில்லை என்று படகில் இருந்த ஏனையவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினரின் உதவியுடன் இரு நாட்களாகத் தேடியும் அவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மீனவர் புத்தளம் – கற்பிட்டிப் பகுதியைச் சேர்தவர் என்றும், குடாரப்பு கடற்கரையில் வாடியமைத்து தங்கியிருந்து கடலட்டை பிடித்துவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்களில் ஒருவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.