நீரில் மூழ்கி ஒருவர் பலி!

இரத்தினபுரி மாவட்டம், நிவித்திகல – நிரிஎல்ல கங்கையில், மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நிரிஎல்ல வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நீரில் மூழ்கிய நபரைப் பிரதேச மக்கள் மீட்டு, நிவித்திகல வைத்தியசாலையில் சேர்த்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக நிவித்தகல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் நிவித்திகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.