யாழில் மேலும் மூவர் கொரோனாவால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

பருத்தித்துறை ஆதார மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் கண்காணிக்கப்பட்டு வந்த வல்வெட்டித்துறையைச் சேரந்த 72 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, பருத்தித்துறை திக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட 56 வயதுடைய பெண்ணின் உடலில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.