வவுனியாவில் மேலும் நால்வர் கொரோனாவால் சாவு!

வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனாத் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என நால்வர் தொற்றால் நேற்று மரணமடைந்துள்ளனர்.

நெளுக்குளத்தில் ஒருவர், கோவில் குளத்தில் ஒருவர், பம்பைமடுப் பகுதியில் அமைந்துள்ள காப்பகத்தில் இருவர் என அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனாத் தொற்றால் மரணித்தவர்களாவர்.

இந்நிலையில், மரணித்த 4 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றித் தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.