இன்றைய வானிலை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

இலங்கையின் இன்றைய வானிலையில், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய இடங்களில் 2.00 க்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லி மீட்டர் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.