“கிராமத்திற்கொரு தொழில் முயற்சியாளர் செயற்திட்டம்” வழிகாட்டல் கருத்தரங்கு.

நிதி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்க்ஷ அவர்களின் எண்ணக்கருவில் நாடு முழுவதும் 14000 புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் “கிராமத்திற்கொரு தொழில் முயற்சியாளர் செயற்திட்டம்”எனும் தொனிப்பொருளில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு இன்று காரைதீவு பிரதேச செயலாளர் திரு. சி. ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

காரைதீவு பிரதேச செயலக விதாதா வள நிலைய விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஜனாப். எல். அஸ்வர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பிரதேச செயலாளர் திரு.சி.ஜெகராஜன் அவர்களால் வெற்றி பெற்ற முயற்சியாளர் ஆவதற்குரிய தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

– Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.