மோதலில் தள்ளிவிழுத்தப்பட்டு ஒருவர் படுகொலை!

கொஹூவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில பிரதேசத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் கீழே தள்ளி விழுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பலபொகுன பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.