மஹியங்கனை தாக்குதலில் ஒருவர் படுகொலை!

மஹியங்கனை – தெஹிகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு இருவருக்கிடையில் இடம்பெற்ற தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் மஹியங்கனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தெஹிகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.

அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.