வாகன இறக்குமதி கட்டுப்பாடு எதிர்காலத்தில் தளர்த்தப்படும் மத்திய வங்கி ஆளுநர் உறுதி.

வாகனங்கள் உட்பட பெரும்பாலான இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

சர்வதேச வர்த்தக சபை ஏற்பாடு செய்த மாநாட்டில் பேசிய அவர், அந்நிய செலாவணியைப் பொறுத்து இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து பரிசீலிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இலங்கையில் தற்போது வெற்றிகரமாகத் தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் மீண்டும் சுற்றுலாத்துறையைத் தொடங்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.