இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்திவிடும் வக்கார் யூனிஸ் நம்பிக்கை.

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணி வீரர்களும் வெற்றி வேட்கையுடன் மிகத்தீவிரமாக விளையாடுவார்கள். கிரிக்கெட்டில் எதிரி அணிகளான இந்தியாவும் பாகிஸ்தானும், கடந்த சில ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதிக்கொள்கின்றன.

இரு அணிகளும் இருதரப்பு அல்லது முத்தரப்பு தொடர்களில் எல்லாம் ஆடுவதில்லை. எனவே இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியை ஐசிசி தொடர்களில் மட்டுமே பார்க்கமுடியும்.

உலக கோப்பையில் இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதேயில்லை. ஒருநாள் உலக கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை என எந்தவிதமான உலக கோப்பை தொடரிலும் இந்தியாவை ஒரு போட்டியில் கூட வீழ்த்தியதில்லை என்ற மோசமான ரெக்கார்டை வைத்திருக்கும் பாகிஸ்தான் அணிக்கு, அதனாலேயே உலக கோப்பை தொடரில் இந்தியாவை எதிர்கொள்ளும்போது பாகிஸ்தான் அணி மீதான அழுத்தமும் நெருக்கடியும் அதிகமாக இருக்கும். அந்த அழுத்தத்தினாலேயே அந்த அணிக்கு இந்தியாவை எதிர்கொள்வதென்றால், ஒருவித பயமும் பதற்றமும் தொற்றிக்கொள்ளும். அதனால் இந்தியாவிடம் தோல்வியும் அடைந்துவிடும்.

டி20 உலக கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் சூப்பர் 12 பிரிவில் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ள நிலையில், வரும் 24ம் தேதி நடக்கும் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான வின்னிங் ரெக்கார்டை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் இந்திய அணியும், அந்த ரெக்கார்டை தகர்க்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் மோதவுள்ளன.

இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி20 உலக கோப்பை போட்டி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ், பாகிஸ்தான் வீரர்கள் அவர்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி ஆடினால், இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்திவிடும். இந்தியாவை வீழ்த்துவது அவ்வளவு எளிதாக இருக்காது. அது பெரிய போட்டி. எனவே இரு அணிகளுக்குமே அழுத்தம் அதிகமாக இருக்கும். போட்டியின் முதல் சில பந்துகள் மற்றும் சில ரன்கள் மிக முக்கியம். ஏனெனில் அதுதான் வெற்றியாளரை தீர்மானிக்கும் என்று வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.