குளவி கொட்டி உயிரிழந்த பெண்ணுக்குக் கொரோனாத் தொற்று!

குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ள குறித்த பெண்ணுக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வைத்தியசாலை நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

ஹப்புத்தளை – தொட்டலாகலை பகுதியில் கடந்த 29ஆம் திகதி தேயிலை தோட்டத்தில் பணியாற்றிய 14 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியிருந்தனர்.

அவர்களில் ஹப்புத்தளை – பிட்டரத்மலை பகுதியைச் சேர்ந்த 49 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.