விபத்தில் சிக்கி பவுசர் சாரதி உயிரிழப்பு!

வாகன விபத்தில் சிக்கி பவுசரின் சாரதியான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருநாகல் மாவட்டம், கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இப்பன்கொடுவ பிரதேசத்தில் பவுசர் ஒன்று லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்தில் பவுசரின் சாரதி படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.