பெட்ரோல் பம்பில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 9 பேர் பலி.

பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெட்ரோல் பம்ப் ஒன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

கடந்த மாதம் இதேபோன்று, ராவல்பிண்டி நகரில் நடந்த மற்றொரு சம்பவத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் சுட்டதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.