பற்றிக் ஆடை உற்பத்தியை மேம்படுத்த உற்பத்தி கிராமம் அங்குரார்ப்பணம்.

யாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியில் பற்றிக் ஆடை உற்பத்தியை மேம்படுத்த உற்பத்தி கிராமம் அங்குரார்ப்பணம்.

நாடளாவிய சௌபாக்கியா உற்பத்தி கிராமம் வறுமை ஒழிப்பு திட்டமானது யாழ். மணியந்தோட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். அத்தோடு மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

பற்றிக் ஆடை உற்பத்திச் செயற்பாடுகளுக்கான சௌபாக்கியா உற்பத்திக் கிராமமாக யாழ். மணியந்தோட்டம் விளங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.