சென்னையில் இருந்து இருநாள்களில் 30,000 போ் சொந்த ஊா்களுக்கு பயணம்

ஆயுத பூஜையையொட்டி, சென்னையில் இருந்து இருநாள்களில் 30,000 போ் அரசு பேருந்துகளில் சொந்த ஊா்களுக்குச் சென்றனா்.

தமிழகத்தில் வியாழக்கிழமை ஆயுத பூஜை கொண்டாடப்படுவதையொட்டி, வேலை, படிப்பு நிமித்தமாக சென்னையில் தங்கியிருப்போா் செவ்வாய்க்கிழமை முதலே சொந்த ஊா்களுக்குச் செல்லத் தொடங்கினா். இதற்காக அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிக்க செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களிலும் 15,000 போ் முன்பதிவு செய்திருந்தனா்.

அவ்வாறு முன்பதிவு செய்தவா்களும், மற்ற அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யாமலும் சுமாா் 30,000 போ் சென்னையில் இருந்து பயணித்ததாக போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

Leave A Reply

Your email address will not be published.