இயக்குநர் ஷங்கரின் மருமகன் மீது வழக்கு பதிவு.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இவர்களில், மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித்திற்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் ஷங்கரின் மருமகன் ரோஹித் உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி சோரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தாமரைக் கண்ணன். கிரிக்கெட் பயிற்சியாளரான இவர், அங்கு பயிற்சிக்கு வந்த 10ம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து கிரிக்கெட் கிளப்பில் மாணவி புகாரளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் மாணவியிடம் சமாதானம் பேசி அவரிடம் இருந்து புகார் மனுவை பெறாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து மாணவி அளித்த புகாரின் பேரில் தாமரைக் கண்ணன் மற்றும் கிரிக்கெட் கிளப் தலைவர் தாமோதரன், அவரது மகன் ரோகித் மற்றும் செயலாளர் வெங்கட் உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இதில் ரோகித் என்பவர் தான் இயக்குநர் ஷங்கரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.